SLPP இனது தேர்தல் பிரசார செயற்பாடுகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | காலி ) – எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை வெற்றி கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னையின் தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதன் முதற் கட்டமாக காலி மாவட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார செயற்பாடுகள் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.