பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | அம்பாறை) – அம்பாறை-உகன பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.