யாழில் கேரளா கஞ்சா மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) –  யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்பரப்பில் ஒரு கிலோ 500 கிராம் பெறுமதியுடைய கேளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழியாக நாட்டுக்குள் போதை பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில் கடற்படையினர் இவ்வாறான சுற்றிவளைப்புகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கமைவாகவே இந்த கேரளா கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா போதை பொருளை மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.