வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிபடுத்தும் நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பின்னர் அது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல் 2019 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைவாக இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.