போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நவகமுவ-ரணால பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 340 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் கஹஹென பகுதியில் வசித்து வரும் 23 வயதுடையவர் என்பதோடு, சந்தேக நபரை கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.