ஸ்ரீ லங்கன் முன்னாள் CEO கைது செய்ய உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண மோசடி தொடர்பில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமலி விஜேநாயக ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.