O/L பெறுபேறுகள் வெளியாகின்றன

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2019ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அநேகமாக மார்ச் 26ம் திகதிக்கு பின்னர் வெளியிட வாய்ப்புக்கள் அதிகம் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.