உதயங்கவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை [ UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு வருகை தந்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

——————————————————————————– UPDATE – [FEB – 14 – 2020 / 08:30 AM]

உதயங்க வீரதுங்கவிடம் CID விசாரணை

ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.