சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மதுகம, தினியாவல பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மதுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.