(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவை பரபரப்பான வகையில் 43:41 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் கபடி உலக சம்பியனானது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் விளையாட்டுத்துறை உறவுகளுக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில் லாகூரில் நடைபெற்ற கபடி உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி எவ்வாறு பங்குபற்றியது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான இரசிகர்கள் முன்னிலையில் லாகூரில் ஞாயிறன்று நடைபெற்ற இறுதிப் போட்டியின் இரண்டாவது பகுதியில் எதிர்நீச்சல் போட்டு புத்திசாதுரியத்துடன் விளையாடிய பாகிஸ்தான் வெற்றியை தனதாக்கியது.