ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று(28) மாலை 03.00 மணிக்கு கூடவுள்ளது.

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி உடன் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு மார்ச் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.