மூவாயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நோய்த்தொற்று காரணமாக இதுவரை 88 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஸ்கொட்லாந்துக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்தது.