கொரோனா வைரஸ் தாக்கம் வெறிச்சோடிப் போன பாடசாலைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மட்டக்களப்பிலுள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பிலுள்ள தனியார்ப் பல்கலைக்கழகத்தில், கொரோனா வைரஸ் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ​பரவியதால், மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டதாகத் தெரியவருகிறது.

திதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம், புணானை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றிலேயே, மாணவர் வருகை வீழ்ச்சியடைந்து, குறித்த பாடசாலைகள், வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளன.