இன்று வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் – ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் தீவிரமடைந்துள்ளதால், இன்றைய தினம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவொன்றினை இட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.