கொரோனா வைரஸ் – 22 வது நபர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் இனங்காணப்பட்டுள்ளார்.

73 வயதுடைய ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நபருடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.