(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அனைத்து கட்சிகளையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.