இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்ட மையங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.