(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் முதலாவதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட, (சுற்றுலா வழிகாட்டி)
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்து வீடு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
அவருக்கு பரிசோதனைகள் பல செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் வைத்தியசாலையிலிருந்து வௌியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்