ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ரஷ்யாவின் குரில் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டரில் 7.8 ஆக பதிவாகி உள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் பயங்கர சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் இதேபோல் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளையும் சுனாமி அலைகள் தாக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.