சகல பள்ளி வாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஹொரவபொத்தான ) –  ஹொரவபொத்தான பிரதேசத்தில் உள்ள சகல பள்ளி வாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுமாறு ஹொரவபொத்தான பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் நாட்டின் தற்போது நிலை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹொரவபொத்தான பெரிய பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் மேலும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.