இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சில கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய நிபுணரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.