கொரோனா பயத்தால் ஜேர்மன் அமைச்சர் தற்கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜேர்மன் அமைச்சர் கொரோனா வைரஸ் பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஜெர்மனியின் ஹெஸ் பிராந்தியத்தின் மாநில நிதி அமைச்சரான தொமஸ்  ஷாஃபெரின் என்பவரே தனது 54  வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர், கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விரக்தியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.