(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் 16 ஆம் திகதிற்கு பின்னர் வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிற்கு முன்னர் பதிவு செய்யுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவுகளை மேற்கொள்ள தவிர்திருப்பவர்களை இனங்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், அவர்களை கைது செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.