(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மற்றுமொரு குழுவினர் இன்று(03) வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தியத்தலாவை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 35 பேர் இன்று(03) அங்கிருந்து வெளியேறியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 16 பேர் இன்று வீடு திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இறுதியாக தங்கவைக்கப்பட்டிருந்த குழுவினர் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வன்னிமாவட்டத்தில் ராணுவம் மற்றும் விமானப்படையினரால் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு இதுவரை 538 பேர் வெளியேற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.