பந்துவீச்சு சோதனைக்கு சென்னை செல்கிறார் தரிந்து கௌஷால்

இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் தரிந்து கௌஷால் பந்துவீச்சு சோதனைக்காக சென்னை செல்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தரிந்து கௌஷாலின் பந்துவீச்சு விதிமுறையை மீறி வீசப்படுவதாக நடுவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது பந்துவீச்சை சோதனை செய்ய சர்வதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

அதன் படி அவருக்கு செப்ரெம்பர் 13ம் திகதி சென்னை ராமசந்திரா பல்கலைகழகத்தில் பந்துவீச்சு பரிசோதனை நடக்கவிருக்கிறது.

(riz)