(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்ட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த உத்தியோகபூர்வ காலம் நிறைவடைய இருந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.