சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார ஊழியர்கள் 27 பேர் முழங்காவில் மற்றும் மன்னாரிலுள்ள கடற்படையின் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும் வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையின் 5 சுகாதார ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.