(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் தொடர்பில் அரசு முன்வைக்கும் எண்ணிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தன்னைப் போன்றே நாட்டு மக்களும் குறித்த எண்ணிக்கையில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசிற்கு தேர்தலை நடாத்துவதில் அவசரம் நிலவுவதால் உண்மையான நோயாளர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்த தயங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது புலனாய்வுப் பிரிவினால் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 5000 பேர் வரை இனஙகண்டுளளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான உண்மை வெளியிடப்பட்ட பின்னர் நாட்டினை முடக்கத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.