குணமடைந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 100 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 309 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.