முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய சேவை மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய முச்சக்கரவண்டிகள் சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, கொரொனா வைரஸ் அபாயம் காரணமாக பெற்றுக்கொடுக்கப்படும் உதவித்தொகை தமது சங்கத்தின் பெரும்பாலானவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் அதன் தலைவர் சுனில் ஜயரத்ன  மேலும் தெரிவித்துள்ளார்.