டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்த வருடத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை எனின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படாது என ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக்-2020 கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, கொரோனா அடுத்தாண்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்படலாம் என டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் ஒலிம்பிக் நடத்துவது கடினமான ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.