இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மேலும் 164 மாணவர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் இருந்து மேலும் 164 இலங்கை மாணவர்கள் இன்று(28) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1172 என்ற விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படும் இலங்கையர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக வௌிநாட்டு உறவுகள் தொடர்பிலான ஜனாதிபதி மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.