ஈரானில் நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஈரான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த சில தினங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகமாகி உள்ளதாக இரான் அரசு கூறி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,680 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி, ஈரானில் 101,650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,418 பேர் உயிரிழந்துள்ளனர்.