மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படமாட்டாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் நாட்டில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படமாட்டாது என மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மது விற்பனை நிலையங்களை மூடுகின்ற சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.