பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்ததையொட்டி சர்பராஸ் அகமதை தலைவர் பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்தது. 

இதற்கிடையே டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில்தான் பங்களாதேஷ், இலங்கை அணிக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் சந்தித்தது.

இந்நிலையில் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் அசார் அலி டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.