கொழும்பு , வாழைத்தோட்டம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 3 பேர் பெண்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்