தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான செய்திகள் உண்மையல்ல

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மையல்ல என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு எந்த  தகவலும் கிடைக்கவில்லை.   

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இராணுவ மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு எவ்விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்“.