(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மத்தள விமான நிலையத்திலிருந்து தென் கொரியாவுக்கு பணியாளர்களை அனுப்பும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பணியாளர்கள் மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான MAI 8M801 என்ற விமானத்தில் இன்று (26) இரவு தென்கொரியாவின் ஷியோல் விமான நிலையம் நோக்கி பயணமாகவுள்ளது.
இந்நிகழ்வில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த மற்றும் கொரிய மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் கிம் வொன் ஷொக் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.