லக்ஷபான தோட்டத்தில் கருஞ்சிறுத்தை கண்டுபிடிப்பு [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் இன்று(26) அரிய வகை கரும் புலியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி தோட்ட பாதுகாப்பு வேலியில் சிக்கிய நிலையில் இக்கரும்புலி பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவ இடத்திற்கு நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனாண்டோ, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்திக் கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்தனர்.