ஊரடங்கை மீறிய 182 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(31) அதிகாலை 4 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 55 வாகனங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 67,107 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.