சில பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துருகிரிய, மிலேனியம்சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று(09) காலை 8 மணி முதல் நாளை(10) காலை 8 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.