இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 333,008 ஆக அதிகரித்துள்ளது. பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 11,382 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 321 பேர் உயிரிழந்துள்ளனர் இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 169,689 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் 153,799 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.