நாளை முதல் மாத்தறைக்கு 1 1/2 மணித்தியாலங்களில் பயணிக்கலாம்

கடுவலையிலிருந்து கடவத்தை வரையிலான நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தை, பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நாளை (வியாழக் கிழமை) 17ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

8.9 கிலோமீற்றர் நீளமான கடுவலை – கடவத்த வெளிவட்ட வீதி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றோடு இணைக்கப்பட்டு, வாகனங்கள் கொழும்புக்கு வராமல் தாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு இதனூடாக வழியேற்படுத்தப்படும்.

இதன் மூலம் கடுவலையிலிருந்து மாத்தறைக்கு சுமார் ஒன்றரை மணித்தியாலத்தில் பயணிக்க முடியும்.