மேலும் 21 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 21 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரையில் மொத்தமாக 811 கடற்படை உறுப்பினர்கள் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 2001 கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.