ராஜிதவின் நம்பிக்கை புள்ளி மொட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அகலவத்தை ஆசனத் தொகுதியின் அமைப்பாளராவார்.

இவர் களுத்துறையில் இடம்பெற்றிருந்த மக்கள் சந்திப்பொன்றின் போது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியின் உறுப்புரிமையினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ரஞ்சித் சோமவன்ஷ, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நெருங்கிய சகா என்பதும் குறிப்பிடத்தக்கது.