கொவிட்-19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட எந்தவொரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2,810 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,317 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான 482 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏலவே 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.