(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் கொரோனா பிரச்சினைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது, பல இலட்சம் ரசிகர்கள் இதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.
தற்போது விஜய் ரசிகர் ஒருவர் மிகவும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வந்துள்ளது.
இதனால் அவருடைய நண்பர்களான மற்ற விஜய் ரசிகர்களும் டுவிட்டர் வாசிகளும் #RIPBala என்ற டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தற்கொலை செய்துக்கொண்டவர் கடைசியாக ‘உன் படத்தை பார்க்காமல் போகிறேன் தலைவா, உன்னையும்’ என கண்ணீர் விட்டுள்ளாராம்.
