வில்கமுவ வனப்பகுதியில் பாரிய தீ

(ஃபாஸ்ட் நியூஸ் |  மாத்தளை) – மாத்தளை, வில்கமுவ வனப்பகுதியில் இன்று அதிகாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தீயணைப்புப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாத்தளை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.