(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக நிர்ணயிக்கும் விதமாக தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரமிதா பண்டார பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திசாநாயக்கவிடம் குறித்த பிரேரணையை கையளித்திருந்தார்.
‘திருமணத்தின் குறைந்தபட்ச வயது’ என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில், நாட்டின் ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான தேசிய மற்றும் சர்வதேச கடமைகளை அரசு நிறைவேற்றுவதை உறுதி செய்வதே பிரேரணையின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
“குழந்தைகளை குழந்தைகளாகக் கருத வேண்டும், இந்த பிரேரணையின் நோக்கம் யாரையும் ஓரங்கட்டுவது அல்ல,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான மாநாடு (சிடாவா) மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான மாநாடு (சி.ஆர்.சி) ஆகியவற்றில் இலங்கை ஒரு உறுப்பினராகும்., இதன் கீழ் மதம் மற்றும் தனிப்பட்ட சட்டங்களைப் பொருட்படுத்தாமல் ஒரு குறைந்தபட்சமாக 18 வயதாக அறிமுகப்படுத்த இலங்கைக்கு கடமை உள்ளது.
“ஒரு நிலையான வயது அனைத்து இலங்கை குழந்தைகளின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் மற்றும் பாதுகாக்கும்” என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
திருமணத்தின் முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச வயது மசோதாவின் படி, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் திருமணத்திற்கு இரு தரப்பினரும் 18 வயதை எட்டவில்லை என்றால் ஒப்பந்தம் செய்யப்பட்ட எந்த திருமணமும் செல்லுபடியாகாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.