நீர் விநியோகம் மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

வறட்சி காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

உயர்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.